சிவகாசி : ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோடு, சிவகாசி சாட்சியாபுரம், சிவகாசி திருத்தங்கல், சாத்துார் இருக்கன்குடி நென்மேனி ரோட்டில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முயற்சி எடுத்தார்.
பன்னீர் செல்வம் கவனத்திற்குகொண்டு சென்றார்.இதன் பயனாக ராஜபாளையம் -சத்திரப்பட்டி ரோட்டில் ரூ.42 கோடியில் ரயில்வே பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சிவகாசி சாட்சியாபுரம், சிவகாசி திருத்தங்கல், நென்மேனி என மூன்று ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நில கையகம் பணிக்கு முதல் கட்டமாக ரூ.67 கோடியே 54 ஆயிரம் ஓதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.